உள்நாடு

அரசினை சாராத சுயாதீன உறுப்பினர்களின் புதிய தீர்மானம்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்திலிருந்து சுயாதீனமாக இருக்கும் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் தனிக் குழுவாக அமரத் குழுவின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 உறுப்பினர்களும், தேசிய சுதந்திர முன்னணியின் 10 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலிருந்து சுயேச்சையாக உள்ள அநுர யாப்பா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு உறுப்பினர்களும் தனிக் குழுவாக பாராளுமன்றத்தில் இவ்வாறு அமரவுள்ளனர். .

Related posts

புதிய மக்கள் முன்னணி இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

ஆதம்பாவா எம்.பி. க்கு சபாநாயகரினால் புதிய பதவி வழங்கிக் கௌரவிப்பு

editor

அரிசி விலை நிச்சயம் குறைவடையும்

editor