அம்பாறை மாவட்டத்துக்குப் பொறுப்பான புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி இன்று (07) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அனைத்து மதத் தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் சுப நேரத்தில் இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய பொலிஸ் அத்தியட்சகர் சனத் அமரசிங்க கம்பஹா மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பண்டாரவளை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி அம்பாறை மாவட்டத்தின் 31ஆவது பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் அம்பாறை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட அம்பாறை மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
-பாறுக் ஷிஹான்