உள்நாடுபிராந்தியம்

அம்பாறை மத்திய முகாம் பகுதியில் ஒருவர் அடித்துக் கொலை – இருவர் கைது

அம்பாறை மத்திய முகாம் பகுதியில் ஒருவர் தடியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பழைய தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வீரகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மத்திய முகாம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளார்.

மத்திய முகாம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

editor

கடந்த 24 மணி நேரத்தில் 2 மரணங்கள் : 487 தொற்றாளர்கள்

பிலிப்பைன்ஸ் தூதுவர் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor