உள்நாடுபிராந்தியம்

அம்பாறை, பொத்துவில் பகுதியில் பஸ் விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்!

அம்பாறை, பொத்துவில், கோமாரி பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 57 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பஸ் விபத்து இன்று சனிக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.

கெப்பட்டிபொலவிலிருந்து அறுகம்பை நோக்கி சுற்றுலா சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸானது பாலத்தில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அரசாங்கத்திடம் ரிஷாட் விடுத்துள்ள கோரிக்கை

நகர சபை முன்னாள் தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

ஊடகத்துறை அமைச்சாின் அறிவித்தல்