சூடான செய்திகள் 1

அமைச்சர் ரஞ்சனின் கருத்து தொடர்பில் ஆராய கிரியெல்ல தமைமையில் குழு நியமனம்

(UTV|COLOMBO) கொக்கேன் உள்ளிட்ட போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சர்கள் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மேற்கொண்டுள்ள கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள சபைத் தலைவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று(20) மதியம் இடம்பெற்ற ஆளுங்கட்சிக்குழு கூட்டத்தின் போது குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த குழுவின் அறிக்கையை எதிர்வரும் குழு கூட்டத்தின் போது சமர்ப்பிக்க இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

மண்சரிவின் காரணமாக பல குடும்பங்கள் பாதிப்பு

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை