உள்நாடு

அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் இல்லை – பிரதமர்

(UTV | கொழும்பு) –  புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அமைச்சர்களின் சம்பளத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் தாங்கள் அனுபவிக்கும் அமைச்சுச் சலுகைகளை மட்டுப்படுத்தவும் தீர்மானித்துள்ளதாக பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, போதியளவு எரிவாயு சிலிண்டர்கள் நேற்று இறக்கி வைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் உறுதியளித்த போதிலும், அதனை நிறைவேற்றத் தவறியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அபிவிருத்தி தொடர்பில் விளக்கமளிக்குமாறு லிட்ரோ நிறுவன தலைவருக்கு பணிப்புரை விடுத்ததாகவும், அதேவேளை பொது நிறுவனங்களுக்கான குழு விசாரணைகளுக்காக லிட்ரோ எரிவாயு நிறுவன அதிகாரிகளை அழைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

Related posts

மீண்டும் நாடு திரும்பிய 223 இலங்கையர்கள்!

‘சதொச’வினால் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம்

குடிநீர் முகாமைத்துவத்துக்காக தனி செயலகம் – ஜீவன் தொண்டமான் விளக்கம்.