அரசியல்உள்நாடு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ள புதிய வரி – பரிந்துரைகளை வழங்க ஜனாதிபதி அநுர விசேட குழு நியமிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து, அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு குழுவை நியமித்துள்ளார்.

அதன்படி, நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர், வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, இலங்கை வர்த்தக சபையின் தலைமை பொருளாதார கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ, அஷ்ரப் உமர், ஷெராட் அமலீன் மற்றும் சைஃப் ஜெப்ஜி ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஜுவைரியா மொஹிதீனுக்கு 2020 Front Line Defenders விருது

இலங்கை தனது முதலாவது குரங்கு அம்மை நோயை உறுதிப்படுத்தியது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு

editor