உலகம்சூடான செய்திகள் 1

அமெரிக்காவில் ஒரே நாளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 21 இலட்சத்து 42 ஆயிரத்து 222 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்யை நாளில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 17 ஆயிரத்தைத் தாண்டியது.கொரோனா தொற்றில் இருந்து 8 இலட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

இதேவேளை, உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78 இலட்சத்து 72 ஆயிரத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நேபாள பிரஜையின் உடலில் இருந்து 90 ஹெரோயின் வில்லைகள் மீட்பு

அரபு நாடுகளே கண் திறவுங்கள் – பாலஸ்தீன அரசியல்வாதி .

மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து