உள்நாடு

அமில வீச்சு தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்

(UTV|கேகாலை ) – கேகாலை – புளத்கோஹூபிட்டிய – மொரந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற அமில வீச்சு தாக்குதல் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மொரந்தொட்ட பகுதியில் இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது இந்த அமில வீச்சு இடம்பெற்றுள்ளதுடன், இந்த சம்பவத்தில் 8 பேர் காயமமைடைந்து கேகாலை பொது மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த சம்பவத்தில் அமில வீச்சை நடத்திய சந்தேகத்திற்குரிய நபரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்து இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டனர்.

Related posts

எம்சிசி மீளாய்வு – 2 வார கால அவகாசம்

கொவிட் 19 : ஜப்பானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் இரண்டு இலங்கையர்கள்

எரிபொருள் விலை குறைத்தாலும், பஸ் கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது