உள்நாடுவிளையாட்டு

அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் செஹான் மதுசங்க இடைநீக்கம்

(UTV | கொழும்பு) – போதைப்பொருளுடன் கைதான கிரிக்கெட் வீரர் செஹான் மதுசங்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கட்  வீரர் செஹான் மதுசங்க பன்னலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

 

சுதந்திர கிண்ண டி20 போட்டிகளில் ...

இவரிடம் 2 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கை அணியின் செஹான் மதுசங்கவை நீதிமன்றில் முன்னிலைபடுத்திய பின்னர் அவரை எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு [UPDATE]

சுதந்திரக் கிண்ண சுற்றுத்தொடர் – நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து கவலை தெரிவிக்கும் பங்களாதேஷ்

நான் தற்போது ஓய்வில் இருக்கின்றேன் தேவையேற்பட்டால் மீண்டும் வருவேன் – ரணில்

editor