அரசியல்உள்நாடு

அனைத்து கட்சித் தலைவர்களையும் நாளை சந்திக்கிறார் ஜனாதிபதி அநுர

அமெரிக்க வரிகளின் தாக்கம் குறித்து கலந்துரையாட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (10) கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி, இந்தக் கூட்டம் நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது X கணக்கில் ஒரு குறிப்பொன்றையிட்டு இதைக் கூறினார்.

இன்று காலை, 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த விடயம் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியைச் சந்திக்க அனுமதி கோரியதாக அவர் கூறினார்.

Related posts

இலங்கையின் சகல தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பு

‘ஒன்லைன்’ கற்கை பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 36,708 பேருக்கு டெங்கு பாதிப்பு

editor