கடந்த 27ம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது வெரும் 30 நிமிடங்களுக்குள் நீர் சின்ன நாகவில்லு கிராமத்திற்குள் புகுந்துள்ளது.
அனைத்தையும் விட்டு விட்டு கையில் கிடைத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியிருக்கின்றனர் அந்த கிராமத்தை சேர்ந்த 24 குடும்பங்கள்.
அவர்கள் இன்றுவரை அப்பிரதேசத்தில் உள்ள மத்ரஸா ஒன்றிலே தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இன்றோடு 21நாட்களாகியும் தண்ணீர் குறையவில்லை. நீர் மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. சுமார் 8அடி உயரத்திற்கும் அதிகமாகவும் சில இடங்களில் 12அடி உயரத்திற்கும் அதிகமாக நீர் தேங்கி நிற்கின்றது.
அந்த கிராமத்தில் உள்ள குளம் நிரம்பியதே இந்த வெள்ளத்திற்கு காரணமாக இருக்கின்றது. எனவே குளம் வற்றி நீர் வழிந்தோடுவது என்பது இன்னும் 5,10 வருடங்கள் ஆனாலும் நடக்காத காரியம் என்பதால் அதற்கு மாற்று வழியை தேடினால்,
அந்த குளத்தின் தண்ணீர் வழிந்தோட எங்கும் வழி இல்லை. அந்த கிராமத்தில் இருக்கும் குளத்தை வெட்டி கடலோடு இணைக்க 3KM வரை புதிய வழியை உறுவாக்க வேண்டி இருக்கின்றது.
அந்த வழி கருத்தீவின் ஊடாகவே கடலோடு இணைக்க பாதையை உறுவாக்க வேண்டும் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு உறுவாக்கினால் சில வேலை கருத்தீவு பிரதேசமும் மூழ்கி,அழிவும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது எனவும் கூறுகின்றனர்.
எனவே சின்ன நாகவில் என்பது அத்திப்பட்டியாவே மாரியிருக்கின்றது.
இப்போது அங்கே இருக்கும் அந்த 30குடும்பங்களின் நிலை என்ன? ..
அவர்களுக்கு அரசாங்கம் தெரிவித்த நிவாரணமாக அரச காணியும் வழங்கி, வீடுகளை கட்டி கொள்ள 50இலட்சமும் வழங்கி அவர்களை மீள் குடியேற்றம் செய்ய வேண்டும்.
அவர்களின் பொருளாதாரம் கூட முற்றாக அழிந்துள்ளது. அவர்களது 80ஏக்கர் விவசாய நிலமும் மூழ்கியே இருக்கின்றது.
கோழி பண்ணை, ஆடுகள்,மாடுகள் என அத்தனையும் அழிந்துள்ளது,இழந்து விட்டனர். இதனை சீர் செய்து அவர்கள் மீண்டு வரவேண்டுமானால் முதலில் அவர்களுக்கான இருப்பிடம் அவசியமாக இருக்கின்றது.
இதுவரைக்கும் புத்தளம் நகரில் இருக்கும் 2 பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த பக்கமும் எட்டி பார்க்கவில்லை என்று கவலை தெரிவித்தனர்.
எதாவது வழியை தேடி நிற்கும் அந்த 24 குடும்பங்களுக்கும் எதாவது வழி பிறக்க பலரும் பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
ஏதாவது வழி பிறக்கும் என நம்பிக்கையோடு அவர்களும் காத்திருக்கின்றனர்.
