உள்நாடு

அட்மிரல் ரவிந்திர இன்றுடன் ஓய்வு

(UTV|COLOMBO) – பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்ன தனது 39 வருட கால சேவையினை நிறைவு செய்து இன்று(31) ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முப்படைகளில் நீண்ட கால சேவை மற்றும் சிரேஷ்ட அதிகாரியாக உள்ள அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்ன, 1980 ஆம் நவம்பர் 01 ஆம் திகதி கடற்படையில் இணைந்து கொண்டார்.

பின்னர் 2015 ஜுலை மாதம் 11ஆம் திகதி முதல் 2017 ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதிவரை கடற்படை தளபதியாக கடமையாற்றியிருந்தார்.

2017 ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி முதல் தற்போது வரை பாதுகாப்பு படைகளின் பிரதானியாக செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 60,425 பேர் கைது

சுகயீனமடைந்து தனது தாயை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்ற ஜனாதிபதி அநுர

editor

நேற்று இனங்காணப்பட்ட 106 தொற்றாளர்களின் விபரம்