அரசியல்உள்நாடு

அட்டாளைச்சேனை விவசாயிகளின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு

அட்டாளைச்சேனை சம்புக்களப்பு தில்லையாற்றின் நிலைமை குறித்து
அட்டாளைச்சேனை வழளாவாய் மேற்கண்ட விவசாய அமைப்பினுடைய தலைவர் அல்ஹாஜ் ACM Sameer செயலாளர் AL நூஹு முஹம்மத் TR வயற்கானி உரிமையாளர்களான A அப்துல் வாஹிட் ஒய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் UK இஸ்மாயில் ஒய்வு பெற்ற பொறியியளாளர் இமாமுதீன் சமுர்த்தி முகாமையாளர் ஆகியோரடங்கிய குழுவொன்று கடந்த மாதம் அட்டாளைச்சேனை தேசியமக்கள் சக்தியினுடைய (NPP) மத்திய குழுவுடனும் அம்பாறை மாவட்ட ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் A.ஆதம்பாவா ஆகியோருடனும் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளப்பட்டது

இச்சந்திப்பில் தில்லை ஆற்றை செப்பனிடுதல் சம்பந்தமான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தனர் அதன் அடிப்படையில் விரைவாக செயற்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் A.ஆதம்பாவா அவர்கள் நீர்ப்பாசன திணைக்களத்தின் அதிகாரிகளோடு கலந்துரையாடி குறிப்பிட்ட வேலையை அவசரமாக செய்து முடிக்குமாறு பணித்திருந்தார்

இதற்கமைய நீர்ப்பாசணத் திணைக்களத்தின் பொறியியலாளர் சகோதரர் S.சுகீதரன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரோடும்
குறிப்பிட்ட விவசாய அமைப்பினரோடும் தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழுவினரோடும் உரிய இடத்திற்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு செப்பெனிடும் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்கள்

அல்ஹம்துலில்லாஹ்

இன்று அந்த வேலைகள் 90 சதவீதம் பூர்த்தி அடைந்த நிலையில் அதனை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் A.ஆதம்பாவா மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினுடைய தலைவர் தோழர் ஏ.எம். அர்பான் அமைப்பாளர் எஸ். எம். றியாஸ் செயலாளர் வஹாப் ரிஷாட் மற்றும் ஏனைய வட்டாரத் தலைவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்

அத்தோடு குறிப்பிட்ட தில்லையாற்றின் இரு மருங்கினையும் பாதைகள் அமைத்து எதிர்காலத்தில் அந்தப் பகுதியை ரம்யமான ஒரு சூழலாக மாற்றி சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய அளவுக்கு அதனை உருவாக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையினை தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை மத்திய குழு பாராளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோளாக விடுத்திருந்தனர்

பாராளுமன்ற உறுப்பினரும் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் அதனையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்
அல்ஹம்துலில்லாஹ் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் A.ஆதம்பாவா அவர்களுக்கும் களத்தில் நின்று இந்த வேலைகள் முடியும் வரை தனது நேர காலங்களை ஒதுக்கிய விவசாய அமைப்பினுடைய தலைவர் ACM . சமீர் ஹாஜியார் அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு சார்பாக விசேடமான நன்றிகள்

வீண் பேச்சுக்களை குறைத்து மக்களுக்குப் பணி செய்வதே தேசிய மக்கள் சக்தியின் குறிக்கோள் எதிர்காலம் எமக்காக

-ஊடகப்பிரிவு NPP அட்டாளைச்சேனை
2025 – 06 – 01

Related posts

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவித்தல்

ஜனாதிபதியானால் அம்பாறையில் இனவாதம் அற்ற முறையில் சேவையாற்றுவேன் – சம்மாந்துறையில் சஜித்

கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை 

editor