சூடான செய்திகள் 1

அடுத்த சில நாட்களுக்கு காலையிலும் இரவிலும் குளிரான வானிலை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களுக்கு காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு கடற்பரப்புகளில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

 

 

 

Related posts

ஹெரோயின் வில்லைகளுடன் ஒருவர் கைது

சுகாதார சேவைகள் நிமித்தம் வைத்தியசாலைகளுக்கு வருவோரை சங்கடத்திற்குள்ளாக்க வேண்டாம்…

அரச வைத்தியசாலைகள் அனைத்தையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை