உள்நாடு

அக்கினியில் இருந்து மீண்ட 45 சடலங்கள் அடக்கம்

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த 45 சடலங்கள் இதுவரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்

அதன்படி, கொவிட் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைகள் முழுவதுமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரண்டு சடலங்கள் உள்ளதாகவும் அவை விரைவில் அடக்கம் செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில், ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாகம் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor

தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள், பிக்கு கல்லூரிகளை ஆரம்பிக்க தீர்மானம்

பிரதமர் தலைமையில் 21வது அரசியலமைப்பு திருத்த சட்டமூல கலந்துரையாடல்