அரசியல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய நியமனங்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளராக சட்டத்தரணி அலரி ரிபாஸ் நியமிக்கப்பட்டதுடன் கட்சியின் மருதமுனைக்கான அமைப்பாளராக வை.கே. ரஹ்மானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக்கடிதங்களை கடந்த வெள்ளிக்கிழமை (12) கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்கள் வழங்கிவைத்தார்.

இதன் போது, கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி, கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் அம்பாறை மாவட்ட செயற்குழு தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அப்துல் ரஸாக் (ஜவாட்),
கட்சியின் பிரதி செயலாளரும் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி அன்ஸில், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் தவிசாளருமான அஷ்ரப் தாஹீர், கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளரும் உயர்பீட உறுப்பினருமான ஆசிரியர் காதர் , உயர்பீட உறுப்பினர் கலீல் முஸ்தபா உள்ளிட்ட பலரும் இதன் போது கலந்துகொண்டனர்.

Related posts

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த, நளின் வெலிக்கடை சிறையில் – ஜம்பர், பாய், தலையணை வழங்கப்பட்டது

editor

40 நாடுகளுக்கு இலவச விசா – அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

editor

அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக நலிந்த ஜயதிஸ்ஸ நியமனம்

editor