சூடான செய்திகள் 1

​ஷாபி விவகாரம்; முறைப்பாடளித்த பெண்களை எச்.எஸ்.ஜீ உட்படுத்துவதில் சிக்கல் இல்லை

(UTV|COLOMBO)- குருணாகல் போதான வைத்தியசாலை வைத்தியர் ஷாபி விவகாரத்தில் முறைப்பாடளித்த பெண்களை எச்.எஸ்.ஜீ பரிசோதனைக்கு உட்படுத்துவதன் ஊடாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்டிருக்கிறார்களா இல்லையா என்ற இறுதி முடிவைக் கண்டறிய முடியும் என பேராசிரியர் வில்பர்ட் எஸ்.ஈ.பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த பரிசோதனையினால் எவ்வித சிக்கல்களும் ஏற்படாது என நாட்டின் மூத்த மகப்பேற்று வைத்தியரும், மகளிர் நோய் தொடர்பான இலங்கை மகப்பேற்று வைத்தியக் கல்லூரியின் முன்னாள் தலைவரும் காப்பாளருமான பேராசிரியர் வில்பர்ட் எஸ்.ஈ.பெரேரா குருணாகலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரத் வீரபண்டாரவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

Related posts

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UPDATE)-பாராளுமன்றம் ஒத்திவைப்பு

இரண்டாம் தவணைப் பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை – கல்வி அமைச்சு