உள்நாடுபிராந்தியம்

ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மது ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் மாத்தளை சந்தி சமஹி மாவத்தை பகுதியில் நேற்று (12) மாலை நடத்திய சுற்றிவளைப்பின் போது பெண் சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 200 மில்லிகிராம் அளவுடய ஹெரோயின் போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் அநுராதபுரம் மாத்தளை சந்தி சமஹி மாவத்தை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 50 வயதுடைய பெண் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளதோடு, விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.

Related posts

‘எவர்கிவன்’ சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க ஆரம்பித்துள்ளது

இளம் குடும்பப் பெண் ஒருவர் மரணம்

editor

எவ்வித முன்னறிவித்தலுமின்றி முடக்கப்படும் சாத்தியம் அதிகம்