உள்நாடு

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி

(UTV | கொழும்பு) – ஹிக்கடுவ, திராணகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு இன்று (31) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காகச் சென்ற இருவர் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

முஸ்லிம் நாடுகளின் எதிர்ப்பினை சம்பாதிக்கும் இலங்கை

நாளாந்த மின் உற்பத்திக்காக 3,500 மெட்ரிக் டன் டீசல்

நாளை மறுதினம் சிறப்பு வங்கி விடுமுறை