உள்நாடு

ஹரின், நளின் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) – மக்கள் சக்தியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி ஆணைக்குழு குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததுடன் அதன் அதிகாரத்தைச் சவால் செய்ததாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னாண்டோ, நளின் பண்டார, ஜே.சீ. அலவத்துவல மற்றும் மயந்த திசநாயக்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த விவகாரம் குறித்து சாட்சியங்களை பதிவு செய்ய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் முன் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

Related posts

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை கட்டடத்தில் தீப்பரவல்!

editor

திருடர்களின் ஆதரவில்லாமல் நாட்டு மக்களின் ஆதரவுடன் நாட்டின் பொறுப்புக்களை கையேற்பேன் – சஜித்

editor

தனியார் வகுப்புகள் நடத்த இரண்டு வாரங்களுக்கு தடை