உள்நாடுபிராந்தியம்

ஹட்டன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் காணாமல் போன மாணவனைத் தேடும் பணி தீவிரம்!

ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு, முடிவுகளுக்காகக் காத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் ஆறு பேர் கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, ஹட்டனில் உள்ள சிங்கமலை நீர்த்தேக்கத்துக்குப் புகைப்படம் எடுக்க சென்றுள்ளனர்.

அவர்களில் ஒருவர் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி கற்கும் 17 வயது தமிழ் மாறன் என்ற மாணவனே நேற்று (08) மாலை 5.00 மணியளவில் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்த பிறகு, நீர்த்தேக்கத்தின் ஓரத்தில் உள்ள பாறையில் ஏறியபோது வீழ்ந்து காணாமல் போயுள்ளார்.

இந்த 6 மாணவர்களும் ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் என்றும் தமிழ்மாறன் என்ற குறித்த மாணவர் அட்டை கடிக்குள்ளானதால்  காலில் காயம் ஏற்பட்டதாகவும், இரத்தத்தை கழுவ நீர்த்தேக்கத்தில் இருந்த பாறையில் ஏறி இரத்தத்தை கழுவி கொண்டிருந்தபோது நீர்தேக்கதில் வீழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

காணாமல் போன மாணவரைத் தேடும் பணி தொடர்ந்து தொடங்கப்படுகிறது.

இதன் காரணமாக, அட்டன் நகருக்கு முக்கியமாக நீர் வழங்கும் சிங்கமலை  நீர்த்தேக்கத்துக்கான நீர் விநியோகம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாக அட்டன் நீர் வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-க.கிஷாந்தன்

Related posts

உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக கலந்துரையாடல்

பாலியல் வழக்கில் சிக்கிய தனுஷ்கவுக்கு எதிரான பிணை தளர்வு!

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் : புத்தளத்தைச் சேர்ந்த 04 மெளலவிமார்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!