உள்நாடுசூடான செய்திகள் 1

ஹஜ்ஜுக்கு சென்ற மற்றுமொரு பெண் மரணம்!

(UTV | கொழும்பு) –

2023 ஹஜ் கட­மைக்­காக சவூ­திக்கு சென்­றி­ருந்த மற்­றொரு இலங்கை யாத்­தி­ரிகர் நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை மக்­காவில் அவர் தங்கி இருந்த அறை­யி­லேயே கால­மானார்.

வாரிய பொலஇஹேனே­கெ­த­ரயைச் சேர்ந்த சேர்ந்த ஏ.பி. உம்மு மர்­ழியா (67) என்­பவர் குரு­நாகல் அமீன் ட்ரவல்ஸ் மூலம் ஹஜ் கடமைக்­காக சென்று கட­மைகள் அனைத்­தையும் நிறைவு செய்­தி­ருந்த நிலையிலேயே நேற்று முன்­தினம் மர­ண­மானர். இவர் நாளைய தினம் நாடு திரும்­பு­வ­தற்கு ஏற்­பா­டா­கி­யி­ருந்த நிலையில் சுக­யீனம் ஏற்­பட்டு மலிக் அப்துல் அஸீஸ் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். பின்னர் அங்கிருந்து தேறி மீண்டும் தனது அறைக்கு வந்து தங்கியிருந்த நிலையிலேயே மரணித்துள்ளார்.

இவ­ரது ஜனாஸா தொழுகை நேற்று மாலை ஹரம் ஷரீபில் நடத்­தப்­பட்டு மக்­காவில் நல்­ல­டக்கம் செய்யப்பட்டதாக ஹஜ் வழிகாட்டியாக சென்றுள்ள மௌலவி எஸ்.ஐ.எம்.ஹபீல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திக்கு:

VV

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் PCR பரிசோதனை

கடமைகளை பொறுப்பேற்ற ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

editor