ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பிலிருந்து சென்னைக்கு பயணித்த 45 வயது பயணி ஒருவர் கடந்த 20 ஆம் திகதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த கமல் பாஷா என்ற பயணி, விமானத்தில் இருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டதாக விமான பணிக் குழுவினரிடம் தெரிவித்துள்ளார்
விமானப் பணியாளர்கள் உடனடியாக முதலுதவி அளித்து, விமானிக்கு தகவல் தெரிவித்தனர், இதனையடுத்து அவர் அவசர உதவிக்காக சென்னை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்தார்.
பின்னர் இறந்தவரின் உடலை விமான நிலைய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.