உலகம்

ஸ்பெயினில் துக்க தினம் அனுஷ்டிப்பு

(UTV| கொழும்பு)- ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, 10 நாட்களுக்கு துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச பேச்சாளர் மரியா ஜேசுஸ் மொன்டெரோ ( Maria Jesus Montero) தெரிவித்துள்ளார்.

இதன்போது நாடு முழுவதிலும் உள்ள பொதுக் கட்டடங்கள் , கடற்படையின் கப்பல்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றினால் 283,339 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 27,117 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

21 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் இந்தியாவுக்கு

சூடான் முன்னாள் பிரதமர் கொவிட் 19 இற்கு பலி

சனல் 4 இன் ஆவணப்படம் – ஜெனீவாவில் வெளியானது.