உள்நாடு

ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுக்களை விசாரணை செய்ய அனுமதி

2020 ஆம் ஆண்டு கொழும்பு குற்றவியல் பிரிவால் நியாயமான சந்தேகமின்றி கைது செய்யப்பட்டதன் மூலம் தங்களது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அந்தத் திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர்களான சுதத் மெண்டிஸ் மற்றும் எச்.டி.எம். பிரேமதிலக ஆகியோர் தாக்கல் செய்த மூன்று அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

நீண்ட பரிசீலனைக்குப் பிறகு, நீதியரசர் மஹிந்த சமயவர்தன தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

Related posts

ஒரே நாளில் 111 பேருக்கு கொரோனா உறுதி

நுரைச்சோலை மின்நிலைய 3வது மின்பிறப்பாக்கி தற்காலிகமாக நிறுத்தம்

கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளுக்கும் பூட்டு