வகைப்படுத்தப்படாத

வேன் மோதி வவுனியா மாணவி உயிரிழப்பு

(UDHAYAM, COLOMBO) – வவுனியா – பதவிய வீதியில், போகஸ்வெவ வெஹெரதென்ன பிரதேசத்தில் வேன் மோதி பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் பாடசாலை முடிந்து பேருந்து ஊடாக வீடு திரும்பிய மாணவி, பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடந்தபோது, இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த மாணவி, பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

9ஆம் தரத்தில் கல்விகற்கும் மாணவியே உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related posts

பனிக்கால ஒலிம்பிக் போட்டி-ஜேர்மன் முன்னிலையில்

Sri Lanka likely to receive light showers today

புதிய அதி உயர் தன்மையைக் கொண்ட உந்துகணையை வெற்றிகரமாக பரீட்சித்துள்ள வட கொரியா