உள்நாடுபிராந்தியம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி – சாரதி வைத்தியசாலையில்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரமுனை நூலகத்திற்கு அருகாமையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி ஒன்று கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று இன்று (03) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை மஜீட்புரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு விபத்தில் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

கடும் பயணக்கட்டுப்பாடுகளுடன் வௌ்ளியன்று திறக்கப்படும்

வரிகளை குறைப்பதற்கு சாத்தியம் இல்லை – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

editor

SJB கூட்டணியில் இருந்து விலகி சுயாதீன உறுப்பினராக பாட்டளி சம்பிக்க