உள்நாடுபிராந்தியம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது – மூவர் வைத்தியசாலையில்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை பகுதியில் இன்று (28) மாலை பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் காரில் பயணம் செய்த மூவர் சிறு காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியிலிருந்து நுவரெலியா வழியாக பண்டாரவளை நோக்கி பிரதான வீதியில் வேகமாகச் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று வீதியைவிட்டு விலகி குடை சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – வெளியானது தீர்ப்பு

editor

கெஹெலியவுக்கு எதிரான வழக்கில் – ரணில் உட்பட பல அமைச்சர்களின் பெயர்!

editor