வகைப்படுத்தப்படாத

வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த 5 மாடி கட்டிடம்.. ; 23 பேர் காயம்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தை சாலிமன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 5 மாடி கட்டிடம் ஒன்று இன்று முற்பகல் இடிந்து வீழ்ந்ததில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 14 பேர் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் 9 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை பாதுகாக்க இராணுவத்தினர், காவற்துறையினர் மற்றும் தீயணைப்பு பிரிவினர் சேவையில்  இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த பிரதேசத்திற்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகளும், 3 தீயணைப்பு வாகனங்களும் அனுப்பபட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பித்து சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்வது பல்கலைக்கழக உபவேந்தர்களின் பொறுப்பாகும்

93 உள்ளாட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுக் தாக்கல் நிறைவு

துறைமுக ஊழியர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது