உள்நாடு

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 5485 இலங்கையர்கள் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – கடந்த மே 25 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 20 நாடுகளில் சிக்கியிருந்த 5485 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அதில் ஒரு கட்டமாக கட்டாரில் இருந்து 268 பேர் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் 5 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய சூழலில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்றைய (27) தினம் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் இந்த வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஆறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு

அஜித் பிரசன்னவுக்கு பிணை

Service Crew Job Vacancy- 100