உள்நாடு

வெல்லம்பிட்டிய பகுதியில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் இருவர் கைது

(UTV | கொழும்பு) -வெல்லம்பிட்டிய பகுதியில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலன்னாவை பகுதியை சேர்ந்த 25 மற்றும் 31 வயதான இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் தேடப்பட்டுவரும் சந்தேகநபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை இன்று (31) கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கடவத்தை துப்பாக்கிச் சூடு: விசாரணைக்கு 4 பொலிஸ் குழுக்கள்

நாளை தினத்திற்குள் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு

தாம் பிரதமராக பதவியேற்கவுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது