சூடான செய்திகள் 1

வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சகோதரி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO)- பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வென்னப்புவ பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் துலக்ஷி பெர்னாண்டோ மற்றும் அவரது சகோதரி ஆகியோரை செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனோர் சந்தியில் வென்னப்புவ பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

பண்டாரகம பிரதேச சபையில் பதற்ற நிலை

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை – சபாநாயகர் இராஜினாமா

editor