உள்நாடுபிராந்தியம்

வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்த குழந்தை பரிதாபமாக பலி

மெதகம, மெகல்லகம பகுதியில் வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்து குழந்தையொன்று பரிதாபமாக பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மல்கஸ்தலாவ, மெகல்லகம பகுதியில் வசிக்கும் 1 வயது 2 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விசாரணையில் தாய் வீட்டில் இருந்த போது, ​​வீட்டின் முன் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்துள்ளதாக தெரியவருகிறது.

சடலம் மெதகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வரவு – செலவு திட்டத்தால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – துமிந்த திஸாநாயக்க

editor

ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசன வெற்றிடத்திற்கு அஜித் மன்னப்பெரும

அதிகாரத்தை வழங்கினால் சம்பள அதிகரிப்பை வழங்குவோம் – மக்கள் விரும்பினால் ரணில் மீண்டும் வருவார் – ராஜித

editor