உள்நாடு

விவசாய குடும்பங்களுக்கு நிவாரணம்

(UTV | கொழும்பு) –  விவசாய குடும்பங்களுக்கு நிவாரணம்

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் 1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் 08 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு ஹெக்டேருக்கு குறைவாக விவசாயம் செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாவும் மற்றும் ஒரு ஹெக்டேருக்கு மேல் விவசாயம் செய்யும் குடும்பங்களுக்கு 20,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாகவும், ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் கணக்கில் பணம் வைப்பு செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மனைவியுடன் கள்ளக்காதல் – நண்பனை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த நபருக்கு மரண தண்டனை

editor

ஆசிரிய நியமனம் குறித்து விசேட அறிவிப்பு!

இன்று சுழற்சி முறையில் ஒரு மணித்தியால மின்வெட்டு