உள்நாடு

விமான நிலைய ஊழியர்களை மறு அறிவிப்பு வரும் வரை பணிக்கு வரவேண்டாம் என அறிவிப்பு

(UTV | கொழும்பு) – விமான நிலையத்திற்கு பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, duty-free பகுதிக்குள் வெளிநபர்கள் பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை இன்று பிற்பகல் 12.30 மணி முதல் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கம்பஹாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பண்டாரநாயக்க விமான நிலைய ஊழியர்களை மறு அறிவிப்பு வரும் வரை பணிக்கு வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வீடியோ | உலமா சபையுடன் நாமல் பேசியது என்ன.? உலமா சபையின் விளக்கம்

editor

முன்னாள் அமைச்சர்கள் நளின், மஹிந்தானந்த மீதான வழக்கு ஒத்திவைப்பு!

editor

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

editor