உள்நாடுவிளையாட்டு

விமானப்படை வீரர் ரொஷான் அபேசுந்தரவின் சாதனை

(UTV | கொழும்பு) –  இலங்கை விமானப்படை வீரரான ரொஷான் அபேசுந்தர, தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை நீந்திச் சென்று மீண்டும் தலைமன்னாருக்கு நீந்தி வந்து புதிய ஆசிய சாதனையொன்றை படைத்துள்ளார்.

அவர் நீந்திச் சென்ற மொத்த தூரம் 59.3 கிலோ மீற்றர் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக அவருக்கு 28 மணித்தியாலங்களும் 19 நிமிடங்களும் 43 வினாடிகளும் எடுத்துள்ளது.

இதற்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த ஆனந்த குமார் என்ற நபர் இந்த சாதனையை படைந்திருந்த நிலையில் அவருக்கு குறித்த தூரத்தை கடக்க 51 மணித்தியாலங்கள் எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாதுகாப்புச் செயலாளராக சம்பத் துய்யகொந்தா

editor

வெப்பமான வானிலை காரணமாக மாணவர்கள் நோய்களுக்கு உள்ளாகும் நிலைமை அதிகரிப்பு

புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து