உள்நாடு

விநியோகத்திற்கு அமைவாக அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் தீர்மானிக்கப்படும்

(UTV | கொழும்பு) – சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோகத்திற்கு அமைவாக அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் தீர்மானிக்கப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், அசாதாரணமான முறையில் பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கான எவ்வித சந்தர்ப்பமும் வியாபாரிகளுக்கு வழங்கப்படமாட்டாதென நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையூடாக தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென அவர் கூறினார்.

சீனி, பருப்பு, கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்கி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பெண்களுக்கான மாதவிடாய் துவாய் அல்லது ‘பேட்’ பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல் நிலையை பெறுவதில் உள்ள சிரமங்களைப் போக்க தொண்டு முயற்சி

மஹிந்த தேசப்பிரிய தனது வீட்டின் முன் பதாகையை தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில்..!

பயணக்கட்டுப்பாடு திங்கள் நீக்கப்படின், மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து