உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனை கடலில் காணமல் போன மீனவர் சடலமாக மீட்பு

வாழைச்சேனை முகத்துவாரப் பகுதியில் இன்று (27) வியாழக்கிழமை இயந்திரப் படகு கவிழ்ந்ததில் ஓட்டமாவடி – நாவலடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய எம்.றிகாஸ் எனும் மீனவர் காணாமல் போயிருந்தார்.

அவர் இன்றிரவு கல்மடு கடல் பிரதேசத்தில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

-ஓட்டமாவடி நிருபர் எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

மரத்தில் மோதி விபத்தில் சிக்கிய வேன் – 11 பேர் காயம்

editor

2030 ஆம் ஆண்டில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கு – ஜனாதிபதி அநுர

editor

தாமரை கோபுரத்தில் ஆரம்பமாகும் அப்சீலிங் சாகச விளையாட்டுக்கள்!