உள்நாடுபிராந்தியம்

வாணி விழாவும் போட்டி நிகழ்ச்சிகளும்

மூதூரில் இந்து சமய விழுமியங்களைப் பிரதிபலிக்கும் போட்டி நிகழ்ச்சிகளும் வாணி விழாவும் இன்று (29) திங்கட்கிழமை மூதூர் இந்து இளைஞர் மன்றத் கட்டிடத் தொகுதியில் தலைவர் திரு. சி. சந்துரு அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

மூதூர் பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் திரு. பே. நகுலேஸ்குமார் அவர்களின் வழிநடத்தலில், மூதூர் பிரதேச அறநெறி மாணவர்கள் கலந்து கொண்டு இந்து சமய விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையிலான போட்டி நிகழ்ச்சிகளும் வாணி விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, இந்து சமயத்தின் பண்பாடுகள் மற்றும் விழுமியங்களைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளை வழங்கினர்.

ஏற்பாட்டாளர்கள், பங்கேற்ற மாணவர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் இதனை பாராட்டினர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

வர்த்தக வலய ஊழியர்கள் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

சகல சமூகங்களும் தமது அடையாளத்துடன், சமத்துவமாக வாழும் சூழலை ஏற்படுத்த அனைவரும் முன் வரவேண்டும் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ரிஷாட் எம்.பி

editor

சகல பல்கலைகழகங்களினதும் கல்விசார ஊழியர்கள் பணிக்கு