அரசியல்உள்நாடு

வாக்காளர் அட்டையை விநியோகித்த தபால் ஊழியர் மீது தாக்குதல் – ஒருவர் கைது.

வாக்காளர் அட்டையை  விநியோகம் செய்த களுத்துறை தெற்கு தபால் நிலைய ஊழியரை தாக்கிய நபரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் களுத்துறை ஜாவத்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தற்சமயம், தபால் நிலைய ஊழியர் வைத்தியசாலையில் அனுமதியாகும் படிவத்துடன் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பேச்சி முற்றி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

தரங்குறைந்த 34 ஆயிரம் முகக் கவசங்கள் மீட்பு

இரு தரப்பினர் இடையே கைகலப்பு – ஒருவர் வெட்டிக் கொலை – 4 பேர் கைது

editor

வரிகளை குறைப்பதற்கு சாத்தியம் இல்லை – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

editor