சூடான செய்திகள் 1

வாகன விபத்தில் இருவர் பலி…

வௌ்ளங்குளம் பகுதியிலிருந்து, மல்லாவி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், வௌ்ளங்குளம் நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனமும் நேருக்கு ​நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர் என, மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய, கெப் வண்டிச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயார் – ஹிருணிகா

தமிழ்த் தலைமைகளை பலப்படுத்த தவறாதீர்கள்….

அமைதியற்ற முறையில் நடந்து கொண்டால் சபையிலிருந்து வெளியேற்ற நேரிடும் – அர்ச்சுனாவுக்கு பிரதி சபாநாயகர் கடுமையாக எச்சரிக்கை

editor