உள்நாடு

வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் போர்வையில் தங்க பிஸ்கட்டுகள் கடத்தல் – ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால், ரூ. 115 மில்லியனுக்கும் மேல் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சுமார் 3 கிலோகிராம் 266 கிராம் எடையுள்ள 28 தங்க பிஸ்கட்டுகளை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 58 வயது நபர் என தெவிக்கப்படுகிறது.

குறித்த நபர் நேற்று (11) காலை 9.30 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

அதன்பின்னர் வாகன உதிரி பாகங்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரியை செலுத்திவிட்டு திரும்பியபோது, சந்தேகத்தின் பேரில் அவர் CID அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இவை, வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் போர்வையில் துபாயிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

அபிவிருத்தித் திட்ட அரச வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்

ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகம் நியமனம்

editor

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன் பதற்றம்: ஹீரோவாகும் வைத்தியர்