உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வாகனப் பேரணியும் நடை பவனியும்

78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கில் இன ஒற்றுமையை பிரதிபலிக்கும் நோக்குடன் வாகனப்பேரணியும் நடைபவனியும் வவுனியாவில் இன்று (04.01) இடம்பெற்றது.

வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வானது வவுனியா புதிய பேருந்து நிலையப் பகுதியில் ஆரம்பமாகி வைத்தியசாலை சுற்றுவட்டம் ஊடாக பசார் வீதியை அடைந்து, அங்கிருந்து கண்டி வீதி வழியாக சென்று வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்றலில் நிறைவடைந்தது.

இதன்போது தேசியக் கொடியை ஏந்தியவாறு வாகனங்கள் பேரணியாக சென்றதுடன், இனங்களின் கலாச்சாரங்களையும் பிரதிபலிக்கக்கூடிய நடைபவனியும் இடம்பெற்றது.

நிகழ்வில் வன்னி மக்கள் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள், சிவசேனை அமைப்பினர், மத குருமார்கள், பொது அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

தென்கிழக்கு இளைஞர் பேரவை ஏற்பாடு செய்த ‘யூத் போரம்- 2024’ நிகழ்வு

அடையாளம் காணப்படாத மூன்று சடலங்கள் மீட்பு

editor

ரஞ்சன் ராமநாயக்க கைது [VIDEO]