வகைப்படுத்தப்படாத

வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

(UDHAYAM, COLOMBO) – எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டாரநாயக்க தேசிய ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கிவரும் பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்தியாவின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.டி.முனி விசேட உரை நிகழ்த்தினார்.

பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு ஜனாதிபதி சான்றிதழ்களை வழங்கினார்.

பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவனத்தில் 30 வருட கால சேவையை பூர்த்தி செய்த பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கான கௌரவ விருதுகளும் இதன்போது ஜனாதிபதியினால்; வழங்கி வைக்கப்பட்டன.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த மன்றத்தின் தலைவி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கல்விமான்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

இந்தியாவில் 19 வயதுக்குட்பட்ட 1.2 லட்சம் பேருக்கு ஹெச்ஐவி

அரச அளவையாளர்களின் போராட்டம் தொடர்ந்தும்?

மணித்தியாலத்தில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் ஹட்டன் ஆர்பாட்டத்தில் தொண்டமான் உறுதியையடுத்து ஆர்பாட்டம் கைவிடப்பட்டது கடைகள் அடைப்பு போக்குவரத்தும் தடை