உள்நாடு

தங்கத்தின் விலை உச்சம் தொட்டது

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (11) 3200 அமெரிக்க ​டொலர்களை (900,000 ரூபாய்க்கு மேல்) தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, உலக சந்தையில் தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்தது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் விளைவாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

முதலீட்டாளர்கள் தங்க இருப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, பாதுகாப்பான சொத்துக்களுக்கு மாறுவதால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

இதற்கிடையில், உலக சந்தையில் தங்கத்தின் விலைக்கு ஏற்ப, நாட்டிலும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு தங்கச் சந்தை இன்று (11) அறிவித்த தங்க விலை விபரங்களின்படி, 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 235,500 ரூபாயாகும்.

மேலும், 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 256,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

Related posts

இராணுவப் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து – பொலிஸ் அதிகாரி பலி

editor

உள்ளூராட்சிமன்ற நிரந்தரமற்ற ஊழியர்கள் அனைவரும் அரச நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள்!

சர்வதேச கல்வி மாநாட்டில் பங்கேற்க கனடா பயணமானார் இல்ஹாம் மரைக்கார்

editor