உள்நாடு

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – CID கண்காணிப்பில்

(UTV|கொழும்பு) – சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்பும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியாகின்ற போலித் தகவல்கள் மற்றும் பிரசாரங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான, சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஜாலிய சேனாரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

திறைசேரிக்கு 07 பில்லியன் ரூபா!

ஊரடங்கை மீறுபவர்களைக் கைது செய்ய விசேட நடவடிக்கை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் நஜீப் ஏ மஜீத் தொடர்பாக அனுதாபப் பிரேரணை நடத்த இம்ரான் எம்.பி கோரிக்கை