உள்நாடு

வட மாகாணம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிப்பு

(UTVNEWS | கொவிட் – 19) -வடக்கில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக இல்லை. ஓரளவு பாதுக்கப்பாகவே வட மாகாணம் உள்ளது என்று யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்பபாண போதனா வைத்தியசாலையில் நடத்திய ஊடகவியளாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், கொரோனா தொற்றில் அதிகமானவர்கள் தொற்றிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் நோய்க் காவிகளாக இருப்பார்கள். இதில் எல்லோரும் அவதானமாக இருக்க வேண்டும்.

எனினும், ஊரடங்கு நிலவரம் மற்றும் கொரோனாவின் எதிர்காலம் பற்றி தெளிவாக கூற முடியாது. இது உலகளாவிய தொற்று நோய் என்றும் தெரிவித்தார்.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலுக்கு

வரி அடையாள எண் தொடர்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்

editor