உள்நாடு

லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 10 மாத குழந்தை உட்பட இருவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இரு பிள்ளைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையில் முதலாம் மற்றும் 21ம் வார்ட்டுக்களில் இருந்த பிள்ளைகளுக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்திருந்தார்.

இதில் மினுவாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 10 மாத குழந்தை ஒருவரும் உள்ளடங்குவதாகவும் அவரது தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணிப்பாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

அண்ணனும் தம்பிக்கும் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் அவசரகால நிலைமை : வர்த்தமானி வெளியானது

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் – சந்தேகநபர்கள் மூவர் கைது

editor