உள்நாடு

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பு

இந்த மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

உலகச் சந்தையில் நிலவும் நிலவரங்களின் படி எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும், நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இந்த நேரத்தில் விலைத் திருத்தத்தை மேற்கொள்ளப்போவதில்லை என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 3,690 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படவுள்ளது.

5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு 1,482 ரூபாய்க்கும், 2.3 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு 694 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று (1) முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4250 ரூபாவாகும்.

அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 65 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 1710 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டு மக்களின் அபிலாசையுடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

மஹிந்த தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம்

editor

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு.